அடுத்த பில்கேட்ஸ் நிச்சயம் அமெரிக்காவிலிருந்து வரமாட்டார்... இந்தியா அல்லது சீனாவிலிருந்தே வருவார் என்கிறது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸின் வெறும் ஒரு நபருடைய பெயராக மட்டுமல்ல... ஒருநாட்டு வளத்தின், வளர்ச்சியின் குறியீடாக இன்று பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இதுவரை உலக பொருளாதார வளத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருந்தது. இப்போது அந்த இடத்தை நோக்கி வேகமாக சீனா நகர்ந்து வருகிறது. இந்தியாவும் இந்த ரேஸில் ஆரோக்கியமான இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், 'அடுத்த பிலேக்ட்ஸ் எந்த நாட்டிலிருந்து உருவாகலாம்?' என்ற கேள்வியுடன் அமெரிக்கர்களிடையே 'கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தவர்களில் 40 விழுக்காட்டினர், அடுத்த பில்கேட்ஸ் இந்தியராகவோ அல்லது சீனாவைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜோக்பி எனும் நிறுவனம் நடத்திய இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 96 சதவிகிதம், வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் புதிதாக கண்டுபிடிக்கவோ, அதை வைத்து வளர்ச்சியைச் சாதிக்கவோ வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.
74 சதவிகித அமெரிக்கர்கள், அடுத்த உலக வல்லரசு நிச்சயம் அமெரிக்கா இல்லை என்றும், இந்தியா, பிரேசில் அல்லது சீனாதான் இந்த பெருமையைப் பெறப் போகின்றன என்றும் கூறியுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 3779 பேர் பங்கேற்றனர். இவர்களில் 40 சதவிகிதத்தினர், அடுத்த பில்கேட்ஸ் இந்தியா அல்லது சீனாவிலிருந்தான் உருவாகப் போகிறார் என்றனர்.
Courtesy-www.thatstamil.oneindia.in
Thursday, January 14, 2010
Tuesday, December 15, 2009
அவதார்
டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் தயாராகிவிட்டது.
12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் பெரும் பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கியுள்ள படம் 'அவதார்'. வரும் வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியாகிறது.
இந்தப் படம் இந்தியாவில் மட்டும் 700 பிரிண்டுகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
ரூ. 1200 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த அவதார், இதுவரை உலகில் வெளியான அனைத்து கிராபிக்ஸ் படங்களையும் விட மிகச் சிறந்த படம் என்று 'டைம்' பத்திரிகை பாராட்டியுள்ளது.
இந்தப் படத்துக்காக தனி கிரகம் ஒன்றையே உருவாக்கினார்களாம் கேமரூன் மற்றும் குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமடுக்க வைத்துள்ளனர்.
உயிரற்ற பொருட்களையும், அசைவுகளுடன் உயிரோட்டமாகக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் இந்தப் படத்தை இந்தியாவில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சிங் கூறுகையில், "அவதார் படத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஹாலிவுட் படத்துக்கும் இந்த அளவு கிராண்டான ரிலீஸ் இருந்ததில்லை என்று வியக்கும் வகையில் அவதார் படத்தை வெளியிடப் போகிறோம்" என்றார்.
Official Avatar Movie
தமிழில் நேரடியாக வெளியாகும் முதல் ஹாலிவுட் '3 டி' படம் என்ற பெருமையைப் பெறுகிறது அவதார்.
உலகம் முழுக்க வரும் டிசம்பர் 18ம் தேதி 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியாகும் அவதார், தமிழில் மட்டும் 100 பிரிண்டுகளுடன் வருகிறது.
தமிழகம் முழுக்க சத்யம் சினிமா வெளியிடுகிறது. இதுகுறித்து அதன் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கூறுகையில்,
இந்த பத்தாண்டு காலத்தில் உலகம் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இந்தப் படத்துக்காகத்தான். டிஜிட்டல் '3 டி' வடிவத்தில் வெளியாகும் இந்தப் படம் பெரிய வரலாறு படைக்கும் என நம்புகிறோம்" என்றார்.
இந்தப் படத்தின் மூலம் 'அவதார்' என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாகப் போகிறது.
உபரி செய்தி: இந்தப் படம் வெளியான பிறகு கேமரூன் இன்னொரு படத்தை இயக்கப் போகிறாராம். அது செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதை மையமாகக் கொண்ட கதையாம். இதற்காக பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளார், நாசாவின் உதவியுடன்.
நாசா செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் தருணத்தில் இந்தப் புதிய படம் வருமாம். ரூ.2000 கோடிவரை இந்தப் படத்துக்கு பட்ஜெட் போட்டிருக்கிறாராம் கேமரூன். இன்னும் கூட அதிகரிக்கலாம், தேவை, காலத்தைப் பொறுத்து என்கிறார்கள்.
நன்றி- www.thatstamil.com
Labels:
avatar,
hollywood,
அவதார்,
ஜேம்ஸ் கேமரூன்,
ஹாலிவுட்
Monday, December 14, 2009
2012 ல் இந்தியா மீது சீனா போர்

ஆசியாவில் தன்னுடைய வலிமையை நிரூபிக்க, இந்தியா மீது 2012ம் ஆண்டுக்குள் சீனா போர் தொடுக்கும் என்று இந்திய பாதுகாப்பு ஆய்விதழ் ஆசிரியர் பாரத் வர்மா ஓர் ஆங்கில் இணையதளத்தக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Labels:
China-India war 2012,
India war
Sunday, December 6, 2009
Saturday, December 5, 2009
Emergency care
பி.கு-இதை எனக்கு அனுப்பிய பிரியா அவர்களுக்கு நன்றி!
Labels:
முதல் உதவி,
விபத்து
Subscribe to:
Comments (Atom)


